அவள் விழிகளின் அழகில் மயங்கிய நான்
அவள் மேல் விடுத்த பார்வை அவள் பார்வையில்
மங்கியது மங்கியது இதனால் அதுவே
என் பார்வையில் காமம் மிகுந்திருந்தது அது
கள்ளமில்லா அவள் காதல் பார்வையில்
வலுவிழந்தது மங்கியது புரிந்தது அவள் பார்வையில்
அன்பும் பண்பும் அரவணைப்பும் தெள்ளத்தெளிவு
கவிதை
கடல் கடந்திருந்த அவன் நலமறிந்து
என் துயர் தீர்க்க தூது வந்த தோழியே !!
என்னை முழுமையாய் அறிந்ததென்னவோ நீதான்
திங்களொருமுறை நின்னைக்கான ஆவலுடன் காத்திருந்தேன்
என்றுமே நீ பொய்த்ததில்லை !!
வெளிர் நிற ஆடைமறந்து இளஞ்சிவப்பு ஆடைஉடுத்திய அர்த்தம் தான் என்னவோஉனக்கும் காதல் நோய் வந்துவிட்டதோ!!!
பூதக்கண்ணாடியால் தேடுகிறேன்
பூர்வீக முகம் பொறித்த பூரிப்பான உன்னை..
பொதுமக்களும் வாங்கி குவிக்கும் பொன்மகளின் கண்ணை..
வழித்து தலைவாரியும் வம்பு பண்ணி வழிந்திறங்கும் நெற்றிமுடியை நான் என்ன சொல்வது…
சிந்தனைக்கப்பாற்பட்டு செதுக்கிய செவிகளிடம் நான் எப்படி சொல்வது..
உன் கண்கள் உலகிற்கே வெண்மையும் கருமையும் பூசுவதை உன்னிடத்தில் எப்போது சொல்வது..
அடியே..
உன் நாசியிடம் மூச்சுவாங்க பாசிபடிந்து பழுதுபட்டிருக்கும் என்னை எக்கணம் தொட்டு துடைப்பாய்…
உன்னிதழ்களையே நாளிதழ்களாக நாளும் வாசிப்பு எனக்கு..
வாசகனாய் மாறி உன்னுதட்டுரேகையில் காதல் படிக்க விருப்பு..
காற்றலையே…
உன்குரலில் பாட ஓராயிரம் பட்சைகள் வரிசையாய் இருக்கு..
கூந்தல் நுனியே…
உன் மோகம் தலையேறி எனக்குள் புரையேறி குரல்வளையில் சிக்கு..
இலைத்துணுக்கே..
என்னை மறுத்து வெறுத்து மரப்பிசினாய் வெளிதள்ளுமளவுக்கு உனக்கு வெறுப்பு..
போதுமடி இது…
நானிருக்கும் வரை நீ எனக்கு தீரா மது..
நாளிருக்கும் வரை உன்னைவிட வேறு எது…
உனக்கென்று ஒருநாள் கற்பனை நாடினேன் பெண்ணே…
அதை இருளில் கோர்த்தேன்..
உன்னிடத்தில், உனக்காக சேர்த்து சூடினேன்…
உடலுருவம் இல்லாமல் உறுப்பில்லாமல் பல கற்பனைகள்..
உன் முகம் தானடி அதற்கு லட்சணம் வார்த்தது…
வாய்ப்பினால் அடைந்த கற்பனையெல்லாம் என்னிடம் நீ காட்டிய காய்ப்பினாலடி…
உன் வெறுப்பில் ஓர் விநோதம் இங்கே…
மூடன் போல் முடிவில்லாது சிந்திக்கிறேன்…
மூடத்தனத்தில் மூழ்கி முத்திரை பதிக்கிறேன்..
வரையறை இல்லாமல் இது வளரத்தான் போகிறது…
வருங்காலத்தில் இது மலரத்தான் போகிறது….
இவ்வுலகம் இதைக் கண்டு மிரளத்தான் போகிறது..