திருக்குறள் இருள்சேர் இருவினையும் சேரா – கடவுள் வாழ்த்து by சங்கர் April 9, 2020 written by சங்கர் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை 0 comment 0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள் வேண்டுதல் வேண்டாமை இலானடி – கடவுள் வாழ்த்து by சங்கர் April 9, 2020 written by சங்கர் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை 0 comment 0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள் மலர்மிசை ஏகினான் மாணடி – கடவுள் வாழ்த்து by சங்கர் April 9, 2020 written by சங்கர் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் 0 comment 0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள் குறள் – 2 by சங்கர் April 9, 2020 written by சங்கர் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? 0 comment 0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள் அகர முதல எழுத்தெல்லாம் – கடவுள் வாழ்த்து by சங்கர் December 27, 2019 written by சங்கர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு குறள் – 1 எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first. 0 comment 0 FacebookTwitterPinterestEmail